Monday, April 14, 2014

2014 சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இச்சித்திரை நாளின் சிறப்பு வெளியீடுகளாக நமது சேகரத்தில் இணையும் ஆவணங்களை அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன்.

1. கர்னல் காலின் மெக்கன்சி பற்றிய ஒரு விழியப் பதிவும் அவரது ஆவணச் சேகரிப்புக்கள் தமிழகத்தில் பாதுகாக்கப்படும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பற்றிய ஒரு விழியப் பதிவு காலையில் வெளியிடப்பட்டது. இதனை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - கர்னல் காலின் மெக்கன்சி என்ற தலைப்பிலான பதிவில் காணலாம்.


2. தமிழ் மரபு நூலகம்  தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பிரத்தியேக வலைப்பூ தமிழ் நூல்கள், தமிழ் இலக்கியச் சேகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு இணையத்தில் கிடைக்கும் தகவல் சேகரிப்புக் களஞ்சியம் என்ற வகையில் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தும் முனைவர்.தேமொழியும் திருமதி கீதா சாம்பசிவமும்  இதுவரை குறிப்பிடத்தக்க பதிவுகளை இணைத்துள்ளனர். இதனைhttp://thfreferencelibrary.blogspot.com/ என்ற சுட்டியில் காணலாம். நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களின் தகவல்கள், நூல்கள் பற்றிய செய்திகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதுமட்டுமன்று இணைய நூல்கள் இதுவரை இப்பதிவில் இடம்பெற்றிருப்பனவற்றில் சில..

  • திரு.சு.சமுத்திரம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • தாசவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் ந.சஞ்சீவி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.சக்திதாசன் சுப்பிரமணியன் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • புலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • குன்றக்குடி அடிகளார் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • புலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • காழிசிவகண்ணுசாமிபிள்ளை அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு விந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • காசி ஆனந்தன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.என்.வி.கலைமணி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் கருணானந்தம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு சா.விஸ்வநாதனின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கவிஞர் வெள்ளியங்காட்டன் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு ஏ.கே.வேலன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பேராசிரியர் வெள்ளை வாரணனாரின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • கி.வா.ஜகந்நாதனின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பரிதிமாற்கலைஞரின் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • எஸ்.எம்.கமால் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • உடுமலை நாராயண கவி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • திரு.இராய சொக்கலிங்கம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • அவ்வை தி.க.சண்முகம்  அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • பண்டிதர் க.அயோத்திதாசர் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • "கல்கி" யின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
  • நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்
இந்த வலைப்பூவை இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டில் வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.


3. ஓலைச்சுவடி வெளியீடு - திருக்குறள். - சுவடி வெளியீடு.
இதனைக் காண THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி* என்ற தலைப்பில் அமைந்த இழையைக் காணலாம்.

இந்தச் சிறப்பு வெளியீடுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இவ்வாண்டு சித்திரை வருடப் பிறப்பின் சிறப்பு அம்சங்களாக நமது சேகரத்தில் இணைகின்றன. 


வாசித்து மகிழுங்கள்!!

​அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

No comments:

Post a Comment