Tuesday, March 17, 2015

1921 ஆம் ஆண்டின் தமிழகத் தொழிலாளர் புள்ளிவிவரம்

– தேமொழி.


 
1922ம் ஆண்டு டிசம்பர் 1  ஆம் தேதி வெளிவந்த நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை (மலர் 4 - இதழ் 10)  இதழில் வெளியான, தமிழகத்தைப் பற்றிய கருத்தைக் கவரும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு ...


லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் 1922ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் தரப்பட்டுள்ளன:
  • 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ...14% மக்கள் மட்டுமே தொழிற்சாலைகளை  நம்பி வாழ்க்கை நடத்தினார்கள் 
  • நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்  எண்ணிக்கை 14,06,286

தொழில் நிறுவனங்கள்:
  • 2105 தொழில் நிறுவனங்கள் மட்டுமே சென்னை மாகாணத்தில் இருந்தன. இவற்றில், 13,06,270  ஆண்களும்; 41,269 பெண்களும் பணிபுரிந்தனர்.
  • இந்தியத் தொழிலாளிகளில் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 6,353 சிறுவர்களும்,   5,362 சிறுமிகளும் அடங்குவர்.
  • இத்தொழிலாளர்களில் 1,389 பேர் ஐரோப்பியரும் ஆங்கிலேய இந்தியர்களும் ஆவார்கள்.
  • சென்னையின் அரசுக்குட்பட்ட போர்க்கருவிகள் தொழிற்சாலையில் பொறுப்புள்ள நிர்வாகப் பதவியில் இந்தியர் ஒருவர் கூட இல்லை 

தொழிற்சாலை உற்பத்தி பற்றிய மேலும் விரிவான தகவல்கள்:
  • காப்பி தேயிலை போன்ற தோட்டப்பயிர்களின் உற்பத்தி பத்தாண்டுகளில் மும்மடங்கு பெருகியது.
  • 91 சுரங்கங்களும் அவற்றில் மாங்கனிசும், மைகாவும் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டன.  இச்சுரங்கங்களில் 6,665 தொழிலாளர்கள் வேலை  செய்தனர்.  அவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 352 பேரும், 235 சிறுமிகளும் அடங்குவர். 
  • நெசவுத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 441; இவற்றில் 33,871 ஆண்களும், 13,750 பெண்களும் பணிபுரிந்தனர்; இவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 2,115 பேரும், 1,894 சிறுமிகளும் பணி புரிந்தனர். 

இத்தொழிற்சாலைகளில் ...
  • பருத்தி எடுக்கும் தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் எண்ணிக்கை 228ம்; அவற்றில் பணி செய்த ஆண்களின் எண்ணிக்கை 6,707 என்றும், பெண்களின் எண்ணிக்கை 5,075 ம் ஆகும், 14 வயதிற்குட்பட்டோரின்  எண்ணிக்கை 177.  பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும், கிரக்கர்கள் இருவரும், நான்கு ஜப்பானியரும், ஐந்து சுவிச்சட்சர்லாந்து பணியாளர்களும் இத்தொழிற்சாலைகளில் பணி புரிந்தனர். 
  • நூல்நூற்கும், துணி நெய்யும்  தொழ்ற்சாலைகளின் எண்ணிக்கை 115 ம், இவற்றில் 23,439 ஆண்களும், 6,167 பெண்களும் பணிபுரிந்தனர்.  இவர்களில் 14 குட்பட்டோரின் எண்ணிக்கை 3,377. நிர்வாகப்பணியிலும், உயர் பதவிகளிலும் இருந்தோரில் ஒரு அமெரிக்கர் இரண்டு பிரெஞ்சுக்காரர், இரண்டு டச்சுக்காரர்களும் அடங்குவர்.
  • கைத்தறிகளின்  எண்ணிக்கை 1,69, 403.  தஞ்சை, சேலம் பகுதிகளில் விசைநாடாத் தறிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 
  • 21,525 பேர் வேலை செய்யும் மாநகராட்சி தொழில் நிறுவனங்கள் 53 இருந்தன.  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 84 ம், அதையொட்டி ய எலும்பரைக்கும் ஆலைகளும் 4,674 பேருக்கு வேலைவாய்ப்பளித்ததுள்ளது.  நவீன வகையில் அமைக்கப்பட்ட 7 சார்க்கரைத் தொழிற்சாலைகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன.
  • குறிப்பிடப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும், உயர்பதவியிலும் இருந்தவர் யாவரும் அந்நியர்களே, இவர்கள் லாபத்தில் பங்கு பெரும் முதலாளிகளாகவும் இருந்தனர்.  அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் கூலிகளாகவும், குமாஸ்தா, மேஸ்திரி தொழில்களில் இருந்தனர். உடல் உழைப்பைத் தந்த இவர்கள் யாவருக்கும் லாபத்தில் பங்கு இல்லை. 
  • சென்னை மாகாணத்தின் தொழில்வாய்ப்பு உயரவேண்டுமானால் அதற்கு அரசின் நடவடிக்கையும், இப்பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களும் முயற்சித்தால் முன்னேறலாம் என லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை தகவல்கள் தருகிறது. 

No comments:

Post a Comment