Saturday, April 25, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 1

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே


கேள்வி: தலித்துகளின் தற்போதைய நிலை என்ன? அது மட்டுமல்ல. இது திராவிட மண். இங்கே அரசியல்வாதிகள் ஜாதி ஒழிப்பைப்பற்றி பெரியார் காலத்திலிருந்து பேசி வருகிறார்கள். இந்த (திராவிட) மண்ணில் தலித் இயக்கங்கள் அவசியம் தானா?

பதில்: இந்த மாநிலம் மட்டுமில்லை. இந்தியா முழுக்க தலித் இயக்கங்களுக்கான அழுத்தமான தேவை இருக்கிறது. ஏன் என கேட்டால் இது ஈவேரா பூமியெனினும் தலித் எழுச்சி வரலாறு 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. 1777ல் சென்னையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று அதைப்பற்றி இரட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அப்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலித் ஒருவரின் மரணத்துக்காக ஒரு விசாரணை நடைபெற்று, அதன்பின் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தலித் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அன்றில் இருந்து தொடர்போராட்டங்கள் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கபடாதது மாற்றம் வருவதற்கான வாய்ப்பை தடுத்துவிட்டது. 1840ல் ஆதிதிராவிடன் எனும் வார்த்தை "பூர்வகுடி திராவிடன்" எனும் பொருள் தரும் வகையில் அறிமுகம் ஆகிறது. 1880ல் ஆதி திராவிடர் மகாஜன சபையும், 1890ல் பறையர் மகாஜன சபையும், 1891ல் திராவிடர் மகாஜன சபையும் உருவாகின்றன. ஆக 1880ல் இருந்து 1891க்குள் மூன்று முக்கிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றைய தலித் இயக்கங்கள் எல்லாமே இவற்றின் வாரிசுகள் தான். இன்றைய இயக்கங்கள் எழுப்பும் கோரிக்கை அன்றைய இந்த மூன்று இயக்கங்களும் எழுப்பிய கோரிக்கைகளே. பெரியார் முதலான தலைவர்கள் இந்த காலக்ட்டங்களின் மத்தியில் வந்து போன தலைவர்களே. பெரியாருடன் நின்றுவிடாமல் நாம் இன்னமும் கூட பல பெயர்களைக்குறிப்பிடவேண்டும்

1845ல் இருந்து 1880 வரை தலித்துகளுக்காக உழைத்த ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள். வி அயோத்திதாச பண்டிதர் (இவர் கே அயோத்திதாச பண்டிதரின் ஆசிரியர்), புலவர் வைரக்கண் வேலாயுதம், வெங்கிடசாமி பண்டிதர், ஆரண்யகதாச பண்டிதர், மைலியா சின்னதம்பி, புலவர் மற்றும் நாவலாசிரியர் பி.ஏ.ஏ ராஜேந்திரம் பிள்ளை மற்றும் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். இந்த தலைவர்கள் தலித் மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்க வைத்து எதிர்காலத்துக்கு வித்திட்டார்கள். சுபிக்ஷார சங்கம், பூர்வதமிழ் அபிமான சங்கம், பஞ்சமர் கல்வி சங்கம், மற்றும் ஆதூலர் அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் காலக்ட்டத்திலும் தலித் மக்களை திரட்டும் முயற்சி நடைபெற்றது

இந்த தலைவர்களின் முயற்சி இவர்களது நோக்கங்களை முன்னெடுக்கும் பின்னாளைய தலைவர்கள் உருவாக வழிவகுத்தது. முக்கிய தலைவர்களாக அயோத்திதாசர் (தென்னாட்டின் முதல் சமூகசீர்திருத்தவாதியான இவர் சாதியற்ற திராவிடர்களின் இயக்கத்தைத்துவக்கினார்) மற்றும் இவரது நண்பர் டி. ஜான் ரத்தினம் (இவர் முதல்முதலாக திராவிடர் கழகத்தை துவக்கி திராவிட பாண்டியன் இதழையும் 1887ல் நடத்தினார். இதன் பின்னரே ஈவேரா தனது திராவிடர் கழகத்தை துவக்கினார்) ஆகியோரைக்கூறலாம்.





இக்காலகட்டத்தைசேர்ந்த மற்ற தலைவர்களாக பி.எம் மதுரா பிள்ளை, பி. வெங்கடாசல சுப்பிரமணியம், மயிலை சின்னதம்பி, ஸ்வாமி அரண்கைய தாசர் (மூன்றாவது தலித் பத்திரிக்கையான சுகிர்த வாசினியின் ஆசிரியர்), ஓ. பழனிசாமி, ஓம்பிரகாச ஸ்வாமி, வி சி வாசுதேவ பிள்ளை, ஸ்வாமி தேசிகானந்தா,  எம்.சி மதுரா பிள்ளை, வி தர்மலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தையும், எல்.சி குருசாமி, எச்.எம் ஜெகன்னாதன் ஆகியோர் அருந்ததியரையும் இவ்வியக்கத்தில் பிரதிநிதிப்படுத்தினார்கள்.

1910களின் துவக்க வருடங்களில் கே அப்பாதுரை, புலவர் பெரியசாமி, ஆர் வீரய்யன் முதலானோர் முதன்மையாகவும், 1920ல் எம் சி ராஜா இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலித் தலைவராகவும் இருந்தார்கள். 1930ல் ஸ்வாமி சகஜானந்தர், பி.எம். வேலாயுதபாணி, வி.ஐ முனுசாமிப்பிள்ளை, என். சிவராஜ், அன்னை மீனாம்பாள் (இந்தியாவின் முதல் தலித் பெண் தலைவர்), ஜோதி வெங்கிட செல்லம் மற்றும் பி. பரமேஸ்வரன் ஆகியோர் தலித்துகளுக்காக அம்பேத்கரால் உந்தபட்டு பணியாற்றினார்கள். ஆக தமிழ்நாட்டில் தலித் எழுச்சிக்கு செறிவான ஒரு வரலாறு இருக்கிறது

இவர்களில் கொள்கைரீதியான அடிப்படையில் தலித் எழுச்சியை முன்னெடுத்தவராக அயோத்திதாசரைக்கூறலாம். அவர் ஜாதியை மறுத்தவர்களையே தமிழராகவும், திராவிடராகவும் கருதினார். ஜாதி இருக்கிறது என்றவர்களை அவர் தமிழராக ஏற்கவில்லை. அவர் சமூகத்தில் "ஜாதி இருக்கிறது என்பவர்கள்- இல்லை என்பவர்கள்" என இரு பிரிவாக பிரித்தார். தலித்- தலித் அல்லாதவர் என்ற இருபிரிவாக கூட அவர் பிரிக்கவில்லை. ஆக தென்னாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாசரே. ஆக தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியா முழுக்க தலித் இயக்கங்கள் தம் முயற்சியை முன்னெடுக்க வேண்டி உள்ளன. இக்கோரிக்கைக்ள் 1880களில் இருந்து எழுப்பபட்டு வருகின்றன. அயோத்திடகசை 1891ல்லேயே முதல் பெட்டிசனை போடுகிறார். இக்கோரிக்கைகள் அன்றுபோலவே இன்றும் முக்கியமானவையாக உள்ளன. ஆக தலித் இயக்கங்களின் அவசியம் இன்றும் உள்ளது.

____________________

http://www.southasianist.ed.ac.uk/article/view/147/88

Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the VCK, Chennai,
26th September 2012
by Hugo Gorringe
Dr. Hugo Gorringe (Hugo.Gorringe@ed.ac.uk)

J. Gowthama Sanna g.sannah@gmail.com or http://gsannah.wordpress.com


மொழியாக்கம்: செல்வன்

________________________________________________________


செல்வன் - holyape@gmail.com
________________________________________________________



1 comment:

  1. I am proud to say that I belong to Paraiyar Community (Out of caste) and never want to be a depressed dalit. Please do not call our people as dalit for your political activities and for earning money.

    ReplyDelete