Saturday, April 25, 2015

பிள்ளைவிளையாட்டு: சொட்டாங்கல் !

--மலர்விழிமங்கையர்க்கரசி





ஆத்துத்தண்ணீல ஆட்டம்போட்டு
மாஞ்சுமாஞ்சு மண்ணுலஅலஞ்சு
அச்சுஅச்சாக் கூழாங்கல்லுப்பொறுக்கி
அடிப்பாவாடையில சேகரிச்சுஅள்ளிக்கிட்டு
அப்படியேவீடுவந்து கொட்டிவிட்டா
முத்தம்பூராவும் முழுசா ரொம்பீரும்.!

ஒத்தக்கல்ல ஒசரமாச்சொடுக்கி அது
தரஎறங்குமுன்ன தடவிஎடுக்கணும்
எடுக்கறகல்லவிட்டு அடுத்தகல்லுல கை
அலுங்னா அம்புட்டுத்தேன் அவுட்டு
அடுத்தாளுக்கு ஆட்டபோரும்புள்ள ஆத்தாடி.!

இப்புடியே கிழக்கப்பாத்து ஒருஆளும்
மேக்கபாத்துஒருஆளுமா அப்புடியே
சொடுக்கி சொடுக்கிக் கல்லெடுத்து
இடதுஓரமாக் குவிச்சுக்கிட்டேவரவர
எரணிநேரமாயிரும் கடைசிக்கல்லெடுக்க!
விளக்குவக்கறதுக்குள்ள வீடுபோய்ச்சேந்துறணும்
எண்ணிப்பாத்துக் கணக்குக்கழிச்சு எந்திருச்சா
எங்கேயிருக்கோமுன்னே எவருக்கும்தெரியாது
வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டிவைக்கும்
விந்தைமனிதரின் பொன்னான கண்டுபிடிப்புத்தேன்
பிள்ளைவிளையாட்டு சொட்டாங்கல்லூ ஊ ஊ ஊ
கல்லுல்லா,,,,கல்லுல்லா.____கல்லுல்லா!



picture source: @ Sengai Podhuvan http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Game_paandi_7.jpg/800px-Game_paandi_7.jpg



________________________________________________
பேராசிரியர் முனைவர்  மலர்விழிமங்கையர்க்கரசி - malarmangay64@gmail.com
________________________________________________





No comments:

Post a Comment