Saturday, April 25, 2015

தேன் சொட்டும் சொட்டாங்கல்

-- கவிஞர் ருத்ரா 

கூழாங்கல் 
பிஞ்சு விரல்களில்
பரிணாமம் கொண்டது
வைரங்களாய்.

பாட்டோடு
சொட்டு சொட்டாய் 
தேன் சொட்டும் இந்த‌
சொட்டாங்கல்.

குட்டை குட்டையாய்
சீட்டிப்பாவாடை
மீட்டிய தெல்லாம்
மரகத வீணைகள்.

நம் வரலாறு
ஆயிரம் பக்கங்களில் இல்லை
இந்த ஒலிப்பிறைகள்
உதிர்த்ததே நம் காலப்பிரளயம்.
 
 
________________________________________________
 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்  - ruthraasivan@gmail.com
 
________________________________________________
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment