Friday, August 19, 2016

காந்தியார் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்ட தமிழ் மண்

--பேராசிரியர் நாகராசன்

தென் ஆப்ரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய காந்தியார் தென் ஆப்ரிக்கா போல் ஒரு ஆசிரமம் அமைக்க உடன் அழைத்துவந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தென் ஆப்ரிக்காச் சத்யாகிரகிகள். அவர் நாடு திரும்பும்போது அவருடைய நண்பர் இந்தியா சென்றதும் வேதாரண்யம் பகுதியில் இருக்கும் தன் முன்னோர்களின் வீட்டையும் சத்யாக்கிரகம் செய்த குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டு வேதாரண்யம் பகுதியில் வாழும் சத்யாக்கிரகிகளையும் சந்திக்குமாறு வேண்டினார்.

இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போரில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக அவர் இந்தியாவைச் சுற்றி வந்து இந்தியச் சூழலை அறிந்துகொள்ள முயற்சி எடுத்ததும் அவர் முதலில் பயணம் செய்த இடம் வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அவரது பயணத்தில் தென் ஆப்ரிக்காவில் வீறுகொண்டெழுந்த மக்கள் இங்கே அடிமைகளாகப் பண்ணையாட்களாகப் பணிபுரிவதைப் பார்த்துக் கலங்கிப்போனவர் தில்லையாடி வள்ளியம்மையின் வீட்டுக்குமுன் மண்டியிட்டு வணங்கி தன்னுடைய எதிர்காலச் செயல்பாடுகள் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் இந்திய சமூகக் கட்டமைப்பின் கிடுக்கிப்பிடியில் சிக்கிச் சக்கையாகும் உழைப்பாளிகளையும் பெண்களையும் கரையேற்றுவதாக உறுதி பூண்டார்.


இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி “இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்தியச் சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்! என் அண்ணனின் மரணத்தை விட வள்ளியம்மையின் மரணம் என்னை அதிகம் பாதிக்கும்” என்று எழுதினார். மகாத்மா காந்தி தில்லையாடி வந்த பொழுது மண்ணைத் தொட்டு வணங்கினார் என்று கூறப்படுகிறது.ஒரு பெண். தன் தாய்நாட்டை பார்த்திராத போதும் அதன் விடுதலைக்காக போரிட்டவர். நாம் 15வது வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வைப்பற்றி புலம்பிக்கொண்டிருந்தோம். இந்தப் பெண் தன் நாட்டிற்காகச் சிறை சென்று இறந்தாள். நாம் நமது விடலைப்பருவத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த வயதில் இந்தப் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போரிட்டாள்.

தகவல் உதவி: http://gouthamtamil.blogspot.in/2012/03/blog-post.html




__________________________________________________________________










பேராசிரியர் நாகராசன்
radius.consultancy@gmail.com
__________________________________________________________________

No comments:

Post a Comment