Thursday, June 22, 2017

ஊறெண்ணெய்


ஆக்கம்: பழமைபேசி விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் வாழ்வில் இன்றியமையாத அளவுக்குப் பலவற்றுக்கும் உதவக்கூடியது. எனவேதான் அகத்தியர் சொல்லிய 'தாயில்லாதவருக்கு விளக்கெண்ணெயே தாய்' என்பதை தாயெண்ணெய் எனச் சொல்வதும், கண்களில் இருக்கும் மாசு நீங்கி நல்ல பார்வை கிட்டுமென்பதை, 'கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தீட்டு பாக்குறா பாரு' எனச் சொல்வதும் தமிழர் வழக்காறு.

உரிய பருவத்தில் பூப்பெய்தாத பெண்மகளை 'இருசி' எனச் சொல்வதும், அத்தகு பெண்மகளை இளக்குவதற்கு விளக்கெண்ணெய் பாவிப்பதும், விளக்குகளுக்கு ஆமணக்கெண்ணெய் பாவிப்பதும், செரிமானமற்று மெலிந்திருக்கும் குழந்தைகள் நன்கு ஊற, தாய்ப்பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்து வர குழந்தை நன்கு ஊறுமென்பதால், இவ்வழக்கத்திற்கு ஊறெண்ணெய் கொடுத்தலெனச் சொல்லி ஊறெண்ணெய் கொடுப்பதும் தமிழர் மரபு.

No comments:

Post a Comment