Sunday, July 2, 2017

மனத்தின் ஈரம் வற்றிய சமூகம்


--கௌதம சன்னா



காலத்தின் தனிமையை
கடந்து போக நீ வெறும் காற்றல்ல
கொதிக்கும் மனங்களின் வடிகாலில்
வெந்து மிதப்பது வேதனைகள் மட்டுமல்ல
குமுறும் இதயங்கள் எப்போதும்
ஓய்வறிவதில்லை.

மனம் திரிந்து அலையும்
பெருங்கூட்டத்தின் ஆயுதங்கள்
வெறும் கத்தியில் மட்டும் செய்யப்படவில்லை.
அதற்குச் சாதியும் மதமும் கத்திகள்தான்..
அதன் மனமே கொலைக்கான ஆயுதங்கள்தான்.

கொடுங்கனவுகளை மாய்க்கும்
மந்திரக்கோல் இனி வாய்க்காது.
தரையில் காலூன்றி மேகங்களைக் கவரும்
எத்தனத்தை எக்காலமும் செய்
காற்று உன்னைக் களவாடும்முன்.

மனத்தின் ஈரம் வற்றிய
ஒரு சமூகத்தின் கோரத்தினை
இம்மண்ணில் விதைத்த மூத்தோர்களை
தேடிப் பிடித்து அழி
தடுக்கவரும் நிகழ்கால கொடூரக்
கரங்களைக் கழுவேற்று.

சாதியின் ரத்த நெடியினையுன்
கைகளில் பூச வரும்
குருதித் தோய்ந்த மனநோயாளியின் மீது
இரக்கம் கொள்ளாதே…
அவன் மனநோயாளி மட்டுமல்ல...



___________________________________________________________
 
 
கௌதம சன்னா
 g.sannah@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment