Saturday, October 14, 2017

தமிழ் மரபு அறக்கட்டளை - பள்ளி அருங்காட்சியகம், மணலூர் அரசுப்பள்ளி

கடந்த ஆண்டு இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக மதுரையில் மணலூர் , சங்கரலிங்காபுரம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் பராமரிக்கும் வகையில் பள்ளி அருங்காட்சியகங்களைத் தொடக்கினோம்.

இன்றுதமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாவலர் குழுவின் மதுரைப் பகுதியைச் சார்ந்த செல்வி கிருத்திகாவின் ஏற்பாட்டில்  மேலும் ஒரு அரசு பள்ளியில் ஒரு பள்ளி அருங்காட்சியகம் தொடங்கியுள்ளோம்.

ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி, மணலூர் கிராமம், திருப்புவனம் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்.
தலைமை ஆசிரியர் - திரு. ஜோசப்

செல்வி. கிருத்திகா தனியாக இதுவரை சேகரித்த பண்டைய பொருட்களைக் காட்சிப்படுத்தி இந்த அருங்காட்சியகத்தைத் தொடக்கியுள்ளார். பள்ளி மாணவர்களும் இனி தங்கள் சேகரிப்புக்களைக் கொண்டு வந்து  சேர்த்து இந்த அருங்காட்சியகத்தை விரிவடையச் செய்வர்.

நம் முயற்சியில் ஆர்வத்துடன் பங்காற்றிய பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி.

நிகழ்வில்  மரங்கள் நடப்பட்டன.

மாணவர்களுக்குத் த.ம.அ வின் மரபு பாதுகாவலர் குழு மதுரை கிருத்திகா அரும்பொருட்கள் பற்றி விளக்கமளித்தார் . பள்ளி  அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.









அன்புடன்
முனைவர் .சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை

No comments:

Post a Comment