Friday, December 29, 2017

த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், தமிழ்மரபு அறக்கட்டளை ஜெர்மனியும் இணைந்து 5.12.2017 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.



இதில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து பல பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உட்பட 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டு ஆய்வரங்கைச் சிறப்பித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். நிர்மலா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் நா. யசோதா தேவி அவர்கள்  தொடக்கவுரையும் நிகழ்த்தினர். மலாய்ப் பல்கலைக்கழக ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் தலைமையுரை ஆற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத்தலைவர் சிறப்புரை ஆற்றினார். தகைசால் பேராசிரியர் தமிழ்மரபு அறக்கட்டளைச் செயலர் முனைவர்.வீ ரேணுகாதேவி மகிழ்வுரை நிகழ்த்தினர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. முருகேசன் அவர்களும், கல்லூரியின் முன்னாள் மாணவி கவிதாயனி மீ.உமாமகேஷ்வரி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்தின் நிறைவாக கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் இரா.சாந்தி அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.

கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.




அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை

No comments:

Post a Comment