Saturday, December 30, 2017

த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்



சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை, மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, ஜெர்மனி, தமிழ் மரபு அறக்கட்டளை ஆகியன இணைந்து  “உலகளாவிய தமிழ் - காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் பொருண்மைகளும் புதுமைகளும்” என்னும் தலைப்பிலான பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கம்  07.12.2017, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தாளாளர் திரு. கி.அபிரூபன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆய்வுக்கோவையை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் முனைவர் வ.பாண்டியராஜன் அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். இளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர், மதுரை காமராசர் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியர் முனைவர் வீ.ரேணுகாதேவி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத்தலைவர் திரு. ச.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு பல்வேறு நாடுகளைச் சார்ந்த 209 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர்.

கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.




இளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு, முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிhpயர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை

No comments:

Post a Comment