Wednesday, March 7, 2018

கிரந்தம் கலந்த சொற்களைத் தமிழுக்கு மாற்றும் முறை: ஒரு வழிகாட்டி


——   இசையினியன்


மொழிகள் என்பது இடத்திற்கு இடம் மாறுபாடு அடைகின்றன. சில சொற்கள் பிற மொழியில் இருந்து ஒரு மொழிக்கு வரும் பொழுது, பிற மொழியின் உச்சரிப்பு மாறுபாடு அடையவே செய்யும். அவ்வாறே தமிழில் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கொண்டு வரும் பொழுது அச்சொற்கள் திரிந்து தமிழின் தன்மைக்கு ஏற்ப மாறுபாடு அடையும். இதைப் புரிந்து கொள்ள மறுப்பவர்களே கிரந்தம் என்னும் எழுத்து முறையைத் தமிழில் அறிமுகம் செய்து உள்ளனர். ஆனால் கிரந்தம் தமிழுக்குச் சிறப்பு செய்யும் என்ற நோக்கில் பார்த்தால், அந்த எழுத்துக்கள் தமிழின் தன்மையை மாற்றவே செய்து உள்ளன என்பதை உணர முடிகிறது.

இவ்வாறு மொழியின் தன்மை மாறாமல் தம் எழுத்திலும், பேச்சிலும் பயன் படுத்த வேண்டும் என்பவர்களுக்கு வட, ஆங்கில மொழி உச்சரிப்புகளை எவ்வாறு தமிழில் மாற்றி வழங்க வேண்டும் என்பது பற்றி நன்னூல் கூறுகின்றது. செய்யுள் வடிவில் உள்ள அந்த விதிகளைப் புரிந்து கொள்ள முற்பட்ட போது இந்தக் கட்டுரை உருவானது.

தமிழில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர் மெய் எழுத்துக்கள், ஒரு ஆய்தம் என 247 வரிவடிவ எழுத்துக்கள் இருக்கின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி பின்னர் தமிழில் கிரந்த எழுத்துக்கள் என்பவை சாதாரணமாக உபயோகம் செய்யப்பட்டன. ஏன் இந்தக் கிரந்த எழுத்துக்கள் அன்று முதல் இன்று வரை கோலோச்சி வருகின்றன? அவசியம் இந்தக் கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையா? என்பதை ஆராய முற்படும் போது சமற்கிருதத்தையும் தமிழின் எழுத்துக்களையும் ஆராய்ந்தே ஆக வேண்டும் எனும் கட்டாயம் ஏற்படுகிறது. சாதாரணமாக எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் உயிர் மெய். சரிதானே. முதலில் உயிரைப் பற்றிப் பார்ப்போம்.

உயிர் எழுத்துக்கள்:


இந்த அட்டவணையைக் காணும் போது ரு, ரூ, லு, லூ, அம், அஃ என்னும் எழுத்துக்கள் தமிழில் உயிர் எழுத்துக்களில் இல்லை. ஏன்? தமிழ் என்பது உயிர் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் வைத்து உள்ளது.

மெய் எழுத்துக்கள்:


மேலே காணும் அட்டவணையை உற்று நோக்கினால் நாம் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. முதலாவது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துக்கள். ஒவ்வொரு மொழிக்கும் உள்ள சிறப்பான எழுத்துக்கள்.

சிறப்பு எழுத்துக்கள்:
இந்த சிறப்பு எழுத்துக்கள் என்றால் என்ன? ஒரு மொழியில் உள்ள எழுத்து மற்றொரு மொழியில் இருக்காது. அவையே சிறப்பு எழுத்துக்கள் எனப்படும்.



ரு, ரூ, லு, லூ, அம், அஃ தமிழில் உயிர் அல்ல ஏன்?
உடலின் முயற்சி இல்லாமலே உயிர்பெறுவது உயிர் எழுத்து ஆகும். வட மொழியில் உள்ள இந்த ரு, ரூ, லு, லூ, அம், அஃ எழுத்துக்கள் மெய்யினால் உருவாக்கம் பெறுகின்றன. எனவே தமிழ் உயிர் எழுத்துக்களில் இவற்றை வைக்கவில்லை.

ஒரு உடலில் உயிர் மட்டும் போதுமா? உடல் இருந்தால்தானே அது மதிக்கப்படும். இப்போது உடல் பற்றி பார்ப்போம். அதாவது,  மெய் பற்றி பார்க்கப் போகிறோம்.

மெய் எழுத்துக்கள்:
உடலின் அவையங்கள் முயற்சியின் போது எழும் ஓசை மெய் எழுத்துக்கள் எனப்படுகின்றன. அடுத்து, ஆரிய தமிழ் சிறப்பு மெய் எழுத்துக்களைப் பார்க்கப் போகிறோம்.



திரியும் சொற்கள்:
வடமொழியும் ஆங்கிலம் சார் மொழிகளும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் பகுக்கப் படுகின்றன. ஒரு வகையில் பார்த்தால் இந்த மொழிகளின் ஒலி அமைப்பு ஒத்துப் போகின்றன. ஆனால் தமிழின் தனித்தன்மையின் காரணமாக இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் உள்ள மொழிகளின் வார்த்தையைத் தமிழில் கூற வேண்டுமானால் தமிழில் அல்லாத ஒலியமைப்புகள் தமிழின் இலக்கண வரம்புகளுக்கு ஏற்ப திரிந்த ஒலியாக மாறும்.

தமிழில் திரியும் வட வெழுத்துக்கள்:
மேற்கண்ட அட்டவணையின் படி பார்த்தால் பின்வரும் எழுத்துக்கள் தமிழில் திரிகின்றன.
இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழும் திரியும்
நன்னூல் - எழுத்ததிகாரம் - பதவியல் 146; என்கிறது. சரி இந்தப் பாடலின் பொருளை உணர்வோம்.

தமிழில் திரியும் வட உயிர் எழுத்துக்கள்:
பாடலின் பொருளை உணர,

இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ... பொது எழுத்து 
ஒழிந்த நால் ஏழும் திரியும்

தொடர்ந்து,  தற்போது அட்டவணையைப் பார்ப்போம்.

தமிழில் திரியும் வட மெய் எழுத்துக்கள்:
அச்சு ஐவருக்கம் முதல்,
ஈறு
யவ்வாதி நான்மை 
ளவ்வாகும் 
ஐ ஐம்
பொது எழுத்து 
வடமொழியில் மெய் எழுத்துக்களை அச்சு என்கின்றனர்.


தமிழில் / ஆரியத்தில் உயிரில் உள்ள பத்து எழுத்துக்களும், தமிழில் / ஆரியத்தில் உள்ள பதினைந்து எழுத்துக்களும் இரு மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள். இவை அல்லாமல் ஆரியத்தில் உள்ள பிற எழுத்துக்கள் தமிழுக்கு வரும் போது திரிந்த எழுத்துக்களாக மாறும்.

வடமொழியின் மாற்றம் அடையும் எழுத்துக்கள்:
ரு, ரூ, லு, லூ, அம், அஃ, Kha, ga,Gha, Chha,Ja,Jha, tha, da, dha, ttha,ddha,dhaa, pha,ba,bha, Sa, sha(ஷ),ssa(ஸ),ha(ஹ),க்ஷ, ஷ்க, ஷ்ப ஆகிய எழுத்துக்கள் தமிழில் திரியும்.

சரி இதுவரை திரியும் எழுத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அந்த எழுத்துக்கள் எவ்வாறு மாறும் எனப் பார்ப்போம்

எழுத்து திரிபுகள்:
அவற்றுள்,
ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து
இடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேல் ஒன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே அகவும் ஐந்து இரு கவ்வும்
ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும்


இனி கிரந்த எழுத்துக்களில் ஒரு சொல்லை எழுத முற்படும் போது அவற்றைத் தமிழ் எழுத்துக்களில் மாற்றி எழுதும் முறையைக் கைக்கொண்டால், நாம் இறந்த பின்னும் தமிழ் வாழும் என்பதில் ஐயம் இல்லை. இந்த முறைகள் கிரந்த நீக்கியாக தனித்தமிழகராதிக்களஞ்சியம் மென்பொருளில் கிரந்த நீக்கி’கூறாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.


உரைநடையில் கூறினால்:
1.     பிற மொழி எழுத்து ரு(ர்); இ ஆகவும், இரு ஆகவும் மாறும்;
(எ.கா) ர்ஷபம் - இடபம்; மிர்கம் - மிருகம்

2.     க, ச, ட, த, ப எழுத்துக்களின் பிற உச்சரிப்புகள்;
Kha, ga, Gha, ha ==> க எனவும்;
Chha, Ja, Jha, sha, saa ==> ச எனவும்;
tha, da, dha ==> ட எனவும்;
ttha, ddha, dhaa ==> த எனவும்;
pha, ba, bha ==> ப எனவும் மாறும்.
(எ.கா)நKhaம் => நகம்; நாGaம் => நாகம், மேGhaம் => மேகம்.

3.     ஜ என்பது ய கரமாகும்;
(எ.கா) பங்கஜம் - பங்கயம்

4.     வார்த்தையின் முதலில் வரும் Sa தமிழில் ச ஆக மாறும்;
(எ.கா) Saங்கரன் - சங்கரன்
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் Sa தமிழில் ச அல்லது ய ஆக மாறும். (எ.கா)பாSaம் - பாசம்; தேSaம் - தேசம்

5.     வார்த்தையின் முதலில் வரும் ஷ தமிழில் ச ஆக மாறும்;
ஷண்முகம் - சண்முகம்;
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் Sa தமிழில் ட ஆக மாறும்.
விஷம் விடம்; ஷாஷி - சாசி

6.     வார்த்தையின் முதலில் வரும் ஸ தமிழில் ச ஆக மாறும்;
ஸபை - சபை;
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் ஸ தமிழில் ச அல்லது த ஆக மாறும்.
மாஸம் - மாசம்; மாதம்

7.     வார்த்தையின் முதலில் வரும் ஹ தமிழில் அ ஆக மாறும்;
ஹரன் - அரன்
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் ஹ தமிழில் க ஆக மாறும்.
மோஹம - மோகம்; மஹி- மகி

8.     வார்த்தையின் முதலில் வரும் க்ஷ தமிழில் க்க ஆக மாறும்;
பக்ஷம் - பக்கம்;
வார்த்தையின் இடையில் வரும் க்ஷ தமிழில் அ ஆக மாறும்;
க்ஷூரம் - கீரம்

9.     ஆகாரம் ஐகாரமாக மாறும்;
மாலா - மாலை; சபா - சபை

10.     ஈ என்பது இ ஆக மாறும்;
மக்ஷு - மகி

11.     வார்த்தையின் முதலில் வரும் ர தமிழில் அர, இர, உர ஆக மாறும்;
ரங்கன் - அரங்கன்; ராமன் - இராமன்; ரோமம் - உரோமம்.
வார்த்தையின் முதலில் வரும் ல தமிழில் இல, உல ஆக மாறும்;
லாபம் - இலாபம்; லோபம் - உலோபம்
வார்த்தையின் முதலில் வரும் ய தமிழில் இய ஆக மாறும்;
யக்கன் - இயக்கன்.

12.     ஈரெழுத்து ஓரெழுத்துப் போல் நிற்றல் = இகரம் வருதல்;
சுக்லம் - சுக்கிலம்; வக்ரம் - வக்கிரம்

13.     ஒற்றை அடுத்து மகர வகரம் நிற்றல் - உகரமாக மாறும்;
பத்மம் - பதுமம்; பக்வம் - பக்குவம்

14.     ஒற்றை அடுத்து நகரம் இருப்பின் அகரமாகத் தோன்றும்;
ரத்நம் - ரத் + அ + நம் - ரதனம் = அரதனம்

15.     ரகரத்தின் பின் உகரம் வருதல்;
அர்த்தம் - அருத்தம்

16.     பிறமொழிச் சொல் என்றமையால் திரிபும் கேடும் உண்டு;
சக்தி - சத்தி (திரிபு); ஸ்தூலம் - தூலம் (கெடுதல்)

இனி அடுத்த முறை எந்தக் கிரந்தம் கலந்த சொல்லைப் பார்த்தாலும் அதனை எவ்வாறு தமிழ் எழுத்துக்களில் மாற்றுவது என்பதைச் செய்து பாருங்கள். மொழியின் சுவை இன்னும் உங்களில் அதிகரிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.









No comments:

Post a Comment